2025 ஜூன் 21, சனிக்கிழமை

வடமாகாணத்தை இந்திரபுரியாக மாற்ற வேண்டும்: ஐ.ம.சு.கூ வேட்பாளர்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நடந்து முடிந்த கொடிய யுத்தத்தினால் பொலிவு இழந்து, வலிமை இழந்து காணப்படும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை  இந்திரபுரியாக மாற்றவேண்டுமென்று ஈ.பி.டி.பி.யின் சார்பில் முதன்மை வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். 

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர்களின் பிரசாரத்தை தொடக்கி வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'ஒரு நாடோ, ஒரு பிரதேசமோ சுபீட்சமடைய வேண்டுமென்றால், அப்பிரதேச மக்களின் கலை பண்பாட்டு விழுமியங்கள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான சூழலை அமைக்க வேண்டிய பொறுப்பும் அதற்கான அரசியல் தலைமைப்பீடத்தை அமைக்க வேண்டிய கடமையும்  அப்பிரதேச மக்களின் தார்மீக கடமையாகும்.

இதுவரை பிழையான அரசியல் வியூகங்களினால் எத்தனையோ உயிர்களை இழந்தோம். கோடிக்கணக்கான பெறுமதி வாய்ந்த உடைமைகளை இழந்தோம். எமது இளைஞர், யுவதிகளின் கல்வியினை இழந்தோம். இந்த நிலை இன்னும் தொடர வேண்டுமா? அப்படியான சூழலில்தான் தங்கள் சுயலாபத்திற்காக அரசியல் நடத்த வேண்டும் என தங்களுக்குள்ளே ஒற்றுமை இல்லாது கங்கணம் கட்டி நிற்கும் கபட அரசியல்வாதிகளை மக்கள் இனம்கண்டு சரியானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்குரியது' என்றார்.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .