2025 ஜூன் 21, சனிக்கிழமை

பசுபிக் ஏஞ்சல் நிகழ்ச்சித் திட்டம் நிறைவு

Super User   / 2013 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


ஸ்ரீலங்கா விமான படையின் ஏற்பாட்டில் யாழில் அமெரிக்க படையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த 'பசுபிக் ஏஞ்சல்' நிகழ்ச்சித் திட்டம் இன்று திங்கட்கிழமை நிறைவுபெற்றுள்ளது.

கடந்த 6ஆம் திகதி தொடக்கம் இன்று வரை யாழில் இரண்டு மருத்துவ முகாம்கள் மற்றும் மூன்று பாடசாலை அபிவிருத்தி போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை அமெரிக்க விமான படையினர் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் அமெரிக்க படையினரின் 'பசுபிக் ஏஞ்சல்' நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவு விழா நடைபெற்றுள்ளது. இந்த செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு உதவிய சகல தரப்பினருக்கும் அமெரிக்க படையினர் இதன்போது நன்றி தெரிவித்தனர்.

அச்செழு சிவப்பிரகாசம் வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் முப்படை அதிகாரிகள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .