2025 ஜூன் 21, சனிக்கிழமை

அரசாங்கம் தமிழர்களை அரசியல் அடிமைகளாக பார்க்கின்றது: துர்க்கேஸ்வரன்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தமிழர்களை அரசியல் அடிமைகளாக அரசாங்கம் பார்க்கின்றதாக காரைநகர் பிரதேச சபையின் உப தலைவர் சந்திரசேகர் துர்க்கேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினர்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'தமிழ் மக்களை அரசியல் அடிமைகளாக அரசாங்கம் நினைக்கின்றதை இல்லாது ஒழிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிக்கும் பட்சத்தில் தமிழர்களின் உரிமைகளையும், சுதந்திரத்தினையும் பெற்றெடுக்க முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு உள்ளூராட்சியில் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. உள்ளூராட்சி சபைக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன

தமிழ் மக்களுக்கு உள்ளூராட்சியின் மூலம் அரசாங்கத்தினால் வழங்கப்படாத உரிமைகளை, தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் பெற்றுகொடுக்க முடியும். வடமாகாண சபையினை கைப்பற்றினால் இந்த உரிமைகளை தமிழர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .