2025 ஜூன் 21, சனிக்கிழமை

ஸ்ரீவல்லிபுரம் ஆழ்வார் ஆலய உற்சவ கலந்துரையாடல்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பருத்தித்துறை ஸ்ரீ வல்லிபுரம் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வய்க்கிழமை பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி ஸ்ரீ வல்லிபுரம் ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகவுள்ளது.

பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆலய வளாகத்தில், கடைகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட துறையினருடன் கலந்துரையாடி தீர்வுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தனியார் பஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் உரிமையாளர்கள் நேரக்கணிப்பீடுகள்;, பாவணையாளர் அதிகார சபையின் ஊடாக ஆலய வளாகத்தில் நிறுவப்படவுள்ள விற்பனை நிலையங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்தல்;, பொருட்களின் தரத்தினை பரிசீலணை செய்தல்;, பொது சுகாதார பரிசோதர்கள் இருவரை பாவணையாளர்கள் அதிகார சபைக்கு தருதல் போன்ற தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டுள்ளன. 

அத்துடன், ஆலய பகுதியில் குடிநீர் வசதிகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .