2025 ஜூன் 21, சனிக்கிழமை

விரிவுரையாளர் தாக்கியதில் மாணவன் படுகாயம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தாக்கியதில் பாடசாலை மாணவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த பரராஜசிங்கம் பிரித்துவி (வயது 14) என்பவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவன், விரிவுரையாளரிடம் மாலைநேர வகுப்பிற்கு சென்ற போதே, விரிவுரையாளரினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தினை அறிந்த பெற்றோர் மாணவனை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .