2025 ஜூன் 21, சனிக்கிழமை

பயிற்சி நெறிக்கான விண்ணப்பம் கோரல்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

வலி.தெற்கு உடுவில் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் நடத்தப்படும் அழகுக்கலையும் மனையியலும் தொடர்பான மூன்று மாதகால பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வட மாகாண கிராம அபிவருத்தி திணைக்களத்தின்அனுசரணையுடன் நடத்தப்படும் இப்பயிற்சி நெறியானது இம்முறை இணுவில் கிழக்கு மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி நெறியில் இணைந்துகொள்ள விரும்புபவாகள் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் கிராம அபிவிருத்தி அலுவலர், பிரதேச செயலகம், உடுவில் என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்கும் படியும் அல்லது நேரடியாக கிராம அபிவிருத்தி அலுவலரை அலுவலக நாட்களில் சந்தித்து கையளிக்கும்படி கோரப்பட்டுள்ளது. 

இப்பயிற்சி நெறியானது செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.   

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .