2025 ஜூன் 21, சனிக்கிழமை

மரங்கள் தறிப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

திருட்டுத்தனமாக மரங்கள் தறித்தெடுத்துச் செல்வது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறிவிக்குமிடத்து இவ்வாறு மரங்கள் தறிக்கப்படுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க முடியும் என இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாதகல் உள்ளிட்ட பல பகுதிகளில் திருட்டுத்தனமாக மரங்களை தறித்துச் செல்பவர்கள் எனக் கருதப்படும் பலர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

பயன்தரும் மரங்களை திருட்டுத்தனமாக தறித்தெடுத்துச் செல்பவர்கள் தொடர்பில் பொலிஸார் முழுமையாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொதுமக்கள் வழங்கும் தகவல்களும் முக்கியமானதாகும் எனவும் பொலிஸார் கூறினர்.

மேலும், 5 பனைமரங்களை தறிப்பதற்கு அனுமதி பெற்றுவிட்டு 15 பனைமரங்களை தறித்தெடுத்துச் செல்ல முற்பட்டவர்களையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .