2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழ். மாநகர சபையின் ஆட்சி காலம் நீடிப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ். மாநகர சபையின் ஆட்சி காலம் மேலும் ஒரு வருடாகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு  அறிவித்துள்ளது.

மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின்  10ஆம் பிரிவின் 2ஆம் உப பிரிவின் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் இந்த கால மீடிப்புச் செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ். மாநகர சபை உறுப்பினர்களின் பதவி காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையிலேயே எதிர்வரும் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வர்த்தக மானி அறிவித்தல் கடந்த யூலை 29ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .