2025 ஜூன் 21, சனிக்கிழமை

எருமை மாடு அறுத்தவர் கைது

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் விற்பனைக்காக சட்டவிரோதமான முறையில் எருமை மாடு அறுத்த இறைச்சிக்கடை வியாபாரி ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான ஆடு, மாடு அறுக்கும் விலங்கறுகளத்தில் சட்டவிரோதமாக எருமை மாடு ஒன்றினை அறுத்த அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இந் நபரை இன்று காலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடிவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .