2025 ஜூன் 21, சனிக்கிழமை

சட்டவிரோதமாக பால மரக்குற்றி ஏற்றிச் சென்றவர் கைது

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

சட்ட விரோதமாக அனுமதி பத்திரமின்றி பால மரக் குற்றிகள் ஏற்றிச் சென்ற நபரை கைதுசெய்துள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோவில் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு லான்ட் மாஸ்ரரில் 8 பால மரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற போதே யாழ். பொலிஸாரினால் கைதுசெய்துள்ளதாக அவர் கூறினர்.

மரக்கூட்டுத் தாபனத்தின் அனுமதியின்றி ஏற்றி குறித்த நபர் ஏற்றிச் சென்றதாகவும், கைதுசெய்யப்பட்ட நபரையும், 8 பால மரக் குற்றிகளையும் யாழ். நிதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .