2025 ஜூன் 21, சனிக்கிழமை

நாவாந்துறையில் கட்டுமானப் பொருட்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்


யாழ். நாவாந்துறை பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்கு தற்காலிகமாக வீடுகளை அமைப்பதற்கான  கட்டுமானப் பொருட்கள் இன்று திங்கட்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

மீள்குடியேறிய 20 குடும்பங்களுக்கு சீமெந்து, தகரம், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

512ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் நாவாந்துறையில் உள்ள புதிய பள்ளிவாசல் வளாகத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 51ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் அபேநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த கட்டுமானப் பொருட்களை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் 512ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேணல் அஜித் பல்லேகல, படை அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .