2025 ஜூன் 21, சனிக்கிழமை

கபேயின் கிளிநொச்சி அலுவலகம் திறப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 20 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கபே என்று அழைக்கப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் பணிமனை நேற்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

வட மாகாண தேர்தலைக் கண்காணிக்கும் முகமாக இந்த அலுவலகம் கிளிநொச்சியில் மாவட்ட செயலகத்திற்கு அருகில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பொதுமக்கள் பொலிஸ் உறவுப் பிரிவின் பொறுப்பதிகாரி எம்.எல்.அரிப்தீன், கபே நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன், மாகாண இணைப்பாளர் திலக் சமந்த, முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் எஸ். ராசலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .