2025 ஜூன் 21, சனிக்கிழமை

எழிலனின் மனைவிக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா,எஸ்.கே.பிரசாத்


தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை  எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வடமாகாணத்தில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை  10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவி அனந்திக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வடமாகாணத்தில் முன்னாள் போராளிகளின் உறவினர்கள் மற்றும் சமூகத்துடன் இணைக்கப்பட்ட போராளிகளின் உறவினர்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டு சந்தோசமாக நாங்கள் வாழ்ந்து வருகின்றோம் நாங்கள் அச்சுறுத்தப்படுகின்றோம் விசாரணைக்குட்படுத்தப்படுகிறோம் என்று சொல்லி அரசியல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே இவ்வாறான அரசியல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது என்று கூட்டமைப்புக்கு எதிராக ' எமக்கு உதவுவதாக கூறி வெளிநாடுகளில் வாங்கும் பல மில்லியன் ரூபா பணம் எங்கே கூட்டமைப்பே கூறு' ' ஆனந்தி நீ எங்களுக்காக செய்தது ஏதாவது உண்டா' ' குறுகிய அரசியல் நோக்கத்திற்காக முன்னாள் போராளிகளை காட்டிக்கொடுக்காதே'  என பல்வேறு கோசங்களைக் தாங்கியவாறு 200 க்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0

  • AJ Wednesday, 21 August 2013 06:28 AM

    எப்படி எல்லாம் அரசு வேலைகள் செய்கிறார்கள். நேரத்துக்கு ஒரு அமைப்பு பேரில் இப்படி போராட்டம் நடத்துவது இவர்களால் மட்டுமே முடியும். திருமதி ஆனந்தி அவர்கள் அவருடை கணவரை பற்றி ஐநா உடன் பேசப்போவது அரசுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் பொறுக்கவில்லை. அதை வெளிபடுத்த இப்படி ஒரு நாடகம். மக்களுக்கும் பஸ் வண்டியில் வந்து ஏன் கொடிபிடிகிறோம் என்று தெரியாமல் கொடிபிடித்து போகிறார்கள்.

    Reply : 0       0

    kamal Wednesday, 21 August 2013 07:16 AM

    இதில் காணப்படுபவர்கள் அம்பாறை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களே. வட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை.

    Reply : 0       0

    kb Wednesday, 21 August 2013 08:25 AM

    எழுதப்பட்ட தமிழில் தெரிகிறது இது யாருடைய பணி(னி) என்று.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .