2025 ஜூன் 21, சனிக்கிழமை

த.தே.கூட்டமைப்பு வேட்பாளர் தாக்கப்பட்டமைக்கு ஈ.பி.டி.பி கண்டனம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத் 

யாழ். மின்சார நிலைய வீதியில் வைத்து வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பின் வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை ஈ.பி.டி.பி வன்மையாகக் கண்டிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்,

அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'வடமாகாணசபைத் தேர்தல், அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறான தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் எவர் ஈடுபட்டாலும் அது கடுமையான கண்டனத்துக்குரியதாகும்.
சுதந்திரமாகவும், ஜனநாயக மரபுகளோடும் தேர்தல் நடக்க வேண்டுமென்பதையே ஈ.பி.டி.பி விரும்புகிறது.

வடக்கு மாகாணத்தில் இதுவரை தேர்தல் முறைகேடுகள், வன்முறைகள் என்பன குறிப்பிடும் அளவில் பதிவு செய்யப்படவில்லை என்று கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்திருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடைபெறவுள்ள இந்த தேர்தலை நீதியாக நடத்தவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கி வடமாகாண சபை தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்பதே எமது கட்சியினது விருப்பம்' என்றும் அவர் தெரிவித்தார். 

யாழ். மின்சார நிலைய வீதியில் வைத்து வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பின் வேட்பாளர் தம்பிராசாவின் வாகனத்தின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை (20) தாக்குதல் நடத்தப்;பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .