2025 ஜூன் 21, சனிக்கிழமை

நாய்களின் தொல்லையால் மக்கள் அசௌகரியம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

மல்லாகம், புகையிரத வீதிப் பகுதியில் நாய்களின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கட்டகாலிகளாக காணப்படும் இந்நாய்களினால் பலர் நாய்க்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரத்தில் மட்டும் நான்கு பேர் நாய்க்கடிக்கு உள்ளாகியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கினர்.

இதேவேளை, வீட்டு வளவில் கட்டிவைக்கப்பட்டிருந்து ஆடொன்றும் நாய்களின் கடிக்கு இறையாகி இறந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பிரதேச சபை உரிய கவணம் செலுத்த வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .