2025 ஜூன் 21, சனிக்கிழமை

மூடப்படாத வாய்க்காலினால் காயமுறும் நல்லூர் பக்தர்கள்

Super User   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


நல்லூர் தென்மேற்கு திசையில் அமைந்துள்ள கடைத்தொகுதியின் அருகிலுள்ள 3 அடி ஆழமுள்ள வாய்க்கால் மூடப்படாதிருப்பதினால் பக்தர்கள் வாய்க்காலுக்குள் வீழ்ந்து காயங்களுக்கு உள்ளாகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகையில், கோவிலின் தென் மேற்கு திசையில் அமைந்துள்ள பிரதான கடைத் தொகுதிகளின் பாதையருகே இருக்கும் வாய்க்கால் மூடப்படாமல் இருப்பதனால் தினமும் பக்தர்கள் வாய்க்கலுக்குள் வீழ்ந்து காயமடைகின்றனர்.

இன்று முதல் விசேட திருவிழாக்கள் ஆரம்பமாகவுள்ளதினால் இனி வருங்காலங்களில் வழமையை விட அதிகளவான பக்தர்கள் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வருவார்கள். இந்நிலையில் இந்த வாய்க்கால் திறந்து இருப்பதினால் பெருமளவு பக்தர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .