2025 ஜூன் 21, சனிக்கிழமை

கொலை வழக்கு: கணவன் விடுதலை; மனைவிக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தென்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான கணவன், மனைவி இருவரில், கணவன் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் மனைவிக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விழுந்து காயங்களுக்குள்ளாகியதாக கூறி கடந்த வாரம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த குருனாகலையைச் சேர்ந்த அப்புகாமி நிசாந்த (வயது 42) என்பவர் கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், மேற்படி நபரின் மரணத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது சந்தேகத்தின்பேரில் கணவன், மனைவி இருவரை பொலிஸார் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட கணவன் மனைவி இருவரில் கணவன் இன்று விடுதலை செய்யப்பட்டதுடன், மனைவிக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .