2025 ஜூன் 21, சனிக்கிழமை

வடமாகாண சபைத் தேர்தல்; நெடுந்தீவு மக்களுக்கு அடையாள அட்டை கையளிப்பு

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதியில் இதுவரை தேசிய ஆளடையாள அட்டை பெற்றிருக்காதவர்களுக்காக நிரந்தர தேசிய ஆளடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவுக்குள் வசிக்கும் மக்களுக்கு அந்த இடத்திலேயே தேசிய ஆளடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுக்கும் சேவை நேற்று புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கபே நிறுவனம் மற்றும் மனித உரிமைகள் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து தேசிய ஆளடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான இந்த சேவைக்கு ஏற்பாடு செய்துள்ளன.

நேற்றைய ஆரம்ப நிகழ்வில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொது முகாமைத்துவ சேவை அதிகாரி எஸ்.ஜெயமாலினி, நெடுந்தீவுப் பிரதேச செயலாளர் ஆழ்வார்ப்பிள்ளை சிறி, நெடுந்தீவுப் பொலிஸ் நிலைய அதிகாரிகள், கபே நிறுவன யாழ் மாவட்ட இணைப்பாளர் எஸ்.மயூரன் ஆகியோரும் இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

2012ஆம் ஆண்டின் வடமாகாண வாக்காளர் கணக்கெடுப்பின்படி வடபகுதியில் சுமார் 85 ஆயிரம் பேருக்கு தேசிய ஆளடையாள அட்டைகள் இல்லை என்ற புள்ளி விவரங்கள் உள்ளன.

இதன் காரணமாகவே அனைவருக்கும் வாக்குரிமையை உறுதிப்படுத்தும் முகமாக தற்சமயம் வடபகுதி மக்களுக்கு தேசிய ஆளடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கபே நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .