2025 ஜூன் 21, சனிக்கிழமை

தபால் மூல வாக்கு சீட்டுக்கள் அனுப்பி வைப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ள  வாக்காளர்களின் வாக்குச் சீட்டுக்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.

இதற்கமைவாக தபால் மூலம் வாக்களிப்பவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 9,10 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலிற்கு தபால் மூலம் வாக்களிக்க யாழ்.மாவட்டத்தில் மட்டும் 9,301 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுகள் பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .