2025 ஜூன் 21, சனிக்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் விபத்திற்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை மாலை  இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மல்லாகம்  சந்திக்கு அருகில்; அளவெட்டி - மல்லாகம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இவ்விபத்து இடம்பெற்றது. 

புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த காப்புறுதி முகவரான அன்ரன் கொன்ஸ்ரன்றையின் (வயது 36),  மல்லாகத்தை சேர்ந்த கே.சந்திரகுமார் (வயது 28) ஆகியோரே  இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் விசாரணையை முன்னெடுத்துள்ள தெல்லிப்பழை பொலிஸார், மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .