2025 ஜூன் 21, சனிக்கிழமை

திருக்கோவில் வேலாயுதா.. இறுவெட்டு வெளியீடு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.ரி.சகாதேவராஜா


திருக்கோவில் பொதுப்பணி மன்றம் திருக்கோவில் வேலாயுதா என்ற பக்திப்பாடல்கள் அடங்கிய இறுவெட்டை வெளியிட்டு வைத்துள்ளது.

இவ் இறுவெட்டு வெளியீட்டுவிழா ஆலய மேடையில் இடம்பெற்றது. வெளியீட்டுவிழாவில் ஆலய குரு சிவஸ்ரீ. சண்முக மகேஸ்வரக் குருக்கள் ஆசியுரை நல்கினார்.

திருக்கோவிலைச் சேர்ந்த பிரபல பாடகர்களான எம்.ராஸ்குமார், எஸ்.நந்தகுமார், எஸ்.மோகனராசன் ஆகியோர் பாடியுள்ள இப்பாடல்களுக்கு இசைப்பிரியன் எம்.ராஸ்குமார் இசையமைத்துள்ளார்.

முதல் இறுவெட்டை பிரதேச செயலாளரின் தாயாரான திருமதி மூத்ததம்பியிடம் வண்ணக்கர் வி.ஜெயந்தன் வழங்கிவைத்தார்.

பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் சிறப்புரையாற்ற இசைப்பிரியன் ராஜ்குமாருக்கு பாராட்டுச் சான்றிதழ் ஒன்றையும் வழங்கி வைத்தார்.

ஆலய தலைவர் சு.சுரேஸ் ஏனைய அதிதிகளுக்கு இறுவெட்டை வழங்கி வைத்தார்.

பிரபல எழுத்தாளர் ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் கலாபூஷணம் எஸ்.அரசரெத்தினம் இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .