2025 ஜூன் 21, சனிக்கிழமை

வீடுகள் கையளிப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத், நவரட்ணராசா

யாழ்.மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும்;; இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த வீடுகள் மற்றும் காணிகள் நேற்று வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளன.

1995 ஆம் ஆண்டு தொடக்கம் இராணுவம் வசம் இருந்த சுழிபுரம், உடுவில், சுன்னாகம், அளவெட்டி, மருதனார்மடம், மனிப்பாய் ஆகிய பிரதேசத்தில் உள்ள 39 வீடுகளும்  2 காணிகளும் நேற்று கையளிக்கப்பட்டுள்ளன.

சுன்னாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க வீடுகள் மற்றும் காணிக்ளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்தார்.

அவற்றினை நான்கு பிரதேச செயலர்களிடமும் அமைச்சா வழங்கினர்.

இதன்போது, யாழ்.மாவட்டத்தில் உள்ள இந்து, பௌத்த அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வும் இடம்பெற்றதுடன், கலை நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

இதேவேளை, வடமராட்சி கிழக்கில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த வீடுகள் மற்றும் காணிகளும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, 51 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி அபேநாயக்க மற்றும் 512 படைப்பிரிவின் தளபதி கேணல் அஜித்பல்லேகல உட்பட் பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .