2025 ஜூன் 21, சனிக்கிழமை

இ.த.கட்சியின் தென்மராட்சிப் பிரதேச தலைமைச் செயலகம் திறப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜெகநாதன்


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச தலைமைச் செயலகம் சாவகச்சேரியில் நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராசா இதனை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளரும் சாவகச்சேரி றிபேக் கல்லூரி அதிபருமான க.அருந்தவபாலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சி.சிறீதரன், அ.விநாயகமூர்த்தி, வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடும் யாழ்.மாவட்ட வேட்பாளர்கள் சயந்தன், திருமதி அனந்தி சசிதரன், இமானுவேல் ஆர்னோல்ட், தம்பிராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .