2025 ஜூன் 21, சனிக்கிழமை

இ.போ.ச நடத்துனர் மீது தாக்குதல்: பஸ் சேவை நிறுத்தம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்
, சுமித்தி தங்கராசா

யாழில், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் நடத்துனர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த பஸ் ஒன்றின் நடத்துனரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

யாழ்.தனியார் பஸ் நடத்துனர்கள் சிலர் இவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தை கண்டித்தும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைதுசெய்யவேண்டும் என்று வலியுறுத்தி அரச பஸ் பணியாளர்கள் யாழில் இன்று பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் இதற்குரிய தீர்வினை பெற்றுத்தரும் வரை தாங்கள் பணி பகிஷ்கரிப்பினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அரச பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப் பணிப் பகிஷ்கரிப்புக் காரணமாக வெளிமாவட்டத்திற்குச் செல்லும் பயணிகள் பேரூந்து சேவையின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .