2025 ஜூன் 21, சனிக்கிழமை

பூர்வீக நிலங்களை பெறுவதற்கு போராடுவேன்: அங்கஜன் ராமநாதன்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

"இப்பிரதேச மக்களை போன்றே நானும் போரினால் பாதிக்கப்பட்டவன். அந்த வகையில், உங்கள் வேதனைகளை நானறிவேன்.  பூர்வீக நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள்ளேயே முடங்கியுள்ளது. ஆகவே உங்களைப் போன்றே நானும் எப்படியாவது அந்த நிலங்களை பெறுவதற்காக போராடுவேன்" என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வட மாகாண சபைக்கான வேட்பாளர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார்.

மாதகல் மீனவர் சங்க பொது மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில்     கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தெற்குப்பகுதி மக்களுக்கு கிடைத்த அபிவிருத்திகள் எமக்கு கிடைக்காமல் இருந்ததால் அன்றைய நாட்களில் மனரீதியாக நாம் இலங்கையின் இரண்டாம் தர மக்கள் என்ற நிலையில் இருந்தோம்.

ஆனால் 2009 – 2013 வரையான காலப்பகுதியில் நிலைமை மாற்றமடைந்தது. இப்போது வடக்கு மாகாணமே அபிவிருத்தியின் மையப்பகுதியாக இருக்கின்றது.

நாம் இன்றைய நிலையில் ஏனைய மாகாணங்களை போன்று எமக்கு தேவையான அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, எமக்கான முன்னேற்றங்கள் அனைத்தையும் முடிந்தவரையில் பெற்றுக் கொள்ள வேண்டும். எமக்கான உரிமைகள் பற்றி நாடாளுமன்றத்தின் மூலமும், எமக்கான அபிவிருத்திகள் தொடர்பில் மாகாண சபையின் மூலமும் பெற்றுக் கொள்வதே பொருத்தமான செயற்பாடாகும்.

நாம் இப்போது நிற்கும் கட்டம் மிக முக்கியமான கட்டம். எதிர்காலத்தை நோக்கிய சரியான பாதையை தெரிவு செய்ய வேண்டிய கட்டத்தில் நிற்கின்றோம். எனவே இந்த மாகாண சபைத் தேர்தலில் மக்களாகிய நீங்கள் சிந்தித்து பொருத்தமான தலைவர்களை தெரிவு செய்யுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .