2025 ஜூன் 21, சனிக்கிழமை

டக்ளஸ், அங்கஜன் செல்லும் பாதை தவறானது: விக்னேஸ்வரன்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சொரூபன்

'டக்ளஸ் தேவனந்தா, அங்கஜன் இராமநாதன், தவராசா அனைவரும் தமிழ் பேசும் நம் சகோதரர்களே. ஆனால் அவர்கள் செல்லும் பாதைதான் தவறானது' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

'எனவே தமிழ் மக்களை ஒழுங்கற்ற முறையில் பயன்படுத்துவோருக்கு எதிராக வாக்களிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்நாட்டின் பிரஜைகளை எதிரிகளாக்கி எம்மை அழித்த இந்த அரசு தற்போது இராணுவத்தை வைத்து எம்மை முடக்க நினைக்கின்றது.

அரசின் சலுகைகளை பெற்று வாழ்பவர்கள் நாம். வீதிகள், தெருக்கள் அமைத்து தந்தோம். நீங்கள் எமக்கு வாக்குகளை தாருங்கள் என்று கூறி பண்டைமாற்று அரசியல் செய்கின்றனர்.

வீடு, உறவு, நிலங்களை இழந்த எம்மக்களுக்காகவா இதை செய்தார்கள். இல்லை தாமும், இராணுவத்தினரும் தமிழ் மக்களின் பகுதிகளுக்கு சென்று அவர்களின் சுதந்திரத்தை முடக்குவதற்காகவே இவ்வீதிகளை அமைத்தார்கள்.

இதுவா அபிவிருத்தி? இதனை தமிழ் மக்கள் நன்றாக உணரவேண்டும்.

டக்ளஸ் தேவனந்தா, அங்கஜன் இராமநாதன், தவராசா அனைவரும் தமிழ் பேசும் நம் சகோதரர்களே. ஆனால் அவர்கள் செல்லும் பாதைதான் தவறானது.

எனவே தமிழ் மக்களை ஒழுங்கற்ற முறையில் பயன்படுத்தூவோருக்கு எதிராக வாக்களிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும்.

தற்போது இடம்பெறும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு 2/3 என்ற பெரும்பான்மையில் வெற்றிபெற்றால் மட்டுமே, சர்வதேசத்திடம் தமிழ் மக்களின் பிரச்சனைகளினை முன்வைக்கமுடியும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .