2025 ஜூன் 21, சனிக்கிழமை

நவீபிள்ளை வடமாகாண அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கேட்டறிந்தார்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 27 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா


வடமாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியிடம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கேட்டறிந்துகொண்டுள்ளார்.

யாழ். பொது நூலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே அவர் வடமாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டுள்ளார்.

மேலும், கடந்த 4 வருடங்களாக வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில்  வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு  காலை நேர விருந்துபசாரமும் வழங்கப்பட்டது. (படங்கள்: சுமித்தி தங்கராசா)




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .