2025 ஜூன் 21, சனிக்கிழமை

தெல்லிப்பழையில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


யாழ். தெல்லிப்பழையில் நடமாடும் சேவை நடைபெற்று வருகின்றது.     தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ் என்பனவற்றை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த நடமாடும் சேவை நடத்தப்படுகின்றது. 

தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இதுவரை தேசிய அடையாள அட்டைகளைக் கொண்டிருக்காதவர்களுக்கு, வரப்போகும் மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பிற்கு முன்னதாக இந்த தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுக்கும் பணியை தொடங்கியுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொது முகாமைத்துவ சேவை அதிகாரி எஸ்.ஜெயமாலினி தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்த நடமாடும் சேவையின்போது, தேசிய அடையாள அட்டைக்காக பூரணப்படுத்தப்பட்ட 230 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, 170 பிறப்புச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டதாக தெல்லிப்பழை பிரதேச செயலாளர் கே.ஸ்ரீமோகன் தெரிவித்தார்.

கபே நிறுவனம் மற்றும் மனித உரிமைகள் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து யாழ். மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக நடத்தும்  இந்த இலவச சேவை எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடையும் என கபே நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .