2025 ஜூன் 21, சனிக்கிழமை

விபத்தில் தந்தை பலி; மகன் படுகாயம்

Super User   / 2013 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தனியார் பேருந்து பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியமையினால் தந்தை உயிரிழந்ததுடன் மகன் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதியில் இன்று காலைஇடமபெற்றுள்ளது.

இவ்விபத்தில் தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த 37 வயதான  மோகனரஞ்சன் என்பவரும் 10 வயதான அவரது மகன் மோகனரஞ்சன் முகிலன ஆகிய இருவரும் தொண்டமானாறு பகுதியில் இருந்த வல்வெட்டித் துறை நோக்கி பயணித்து கொண்டிருந்த போது, உடுப்பிட்டி சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் இவ்விபத்து சம்பவம் இடமபெற்றுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் மகனும் வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில், தந்தை பலியாகியுள்ளார். எனினும் மகன் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .