2025 ஜூன் 21, சனிக்கிழமை

அரசின் பலத்துடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்: திலக் உடுகம

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

அரசின் பலத்துடன் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் வடமாகாண சபை வேட்பாளர் திலக் உடுகம இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

யாழ். நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமையில் உள்ள சமாதானத் தூபியின் முன்பாக இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினர்.

அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா மக்கள் கட்சியில் யாழ். மற்றும் வன்னி பகுதியில் 62 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

பதிவு செய்துள்ள மக்களுக்கு அன்றாட தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. அத்துடன், சில அரசியல்வாதிகள் மக்களின் சில தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர். அவ்வாறான உதவிகள் மக்களுக்கு போதாமல் இருக்கின்றன.

வடமாகாண சபை தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் முதன் முறையாக போட்டியிடுகின்றோம். யாழ்.மாவட்ட மக்கள் எமக்கு ஆதரவு அளித்து எம்மை வெற்றி அடையச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .