2025 ஜூன் 21, சனிக்கிழமை

மக்களிடமிருந்து என்னை பிரிக்க முயற்சி; அங்கஜன்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவக்கச்சேரி சம்பவத்தினால் எனது பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்தின் ஊடாக என் மீதும், எமது வெற்றியின்  மீதும் சேறுபூசி மக்களிடமிருந்து என்னை பிரிக்க முற்படுகின்றனர் என்று வட மாகாண சபைத் தேர்தலின் ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின்    வேட்;பாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின், யாழ் மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

சாவக்கச்சேரி சம்பவம் தொடர்பில் தெளிவுப்படுத்தி தேர்தல் ஆணையாளருக்கு கடிதமொன்றை அவர் அனுப்பிவைத்துள்ளதுடன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

    கடந்த 27.08.2013 செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணியளவில் சாவகச்சேரி பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் என் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதைதடுக்க வந்த எனது பொலிஸ் மெய்ப் பாதுகாவலர் திஸாநாயக்க துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தற்பொழுது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச் சம்பவம் தொடர்பில் எம்மால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும் பொலிஸாரால் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இச் சம்பவத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டது குமாரு சர்வானந்தன் என்பவரே என உறுதிப்படுத்தி பொலிஸில் பலர் சாட்சியமளித்துள்ளனர்.

இருந்த போதிலும் குறித்த நபர் குமாரு சர்வானந்தன் என்பவரை பொலிஸார் கைது செய்யமால் ஒரு பக்க சார்பாக எம் தரப்பு மீது மட்டும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பொலிஸாரின் இவ்வாறான நடவடிக்கையானது கண்டனத்திற்குரிய விடயமாகும்.

மேலும், இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளேன். எனவே, இச் சம்பவத்துடன் தொடர்புடைய சர்வானந்தன் கைது செய்யப்படாமையானது எனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. ஆகவே உடனடியாக இச் சம்பவத்துடன் தொடர்புடைய சர்வானந்தனை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றேன்.

இச் சம்பவத்தின் ஊடாக என் மீதும், எமது வெற்றியின்  மீதும் சேறுபூசி  மக்களிடமிருந்து என்னை பிரிக்க முற்படுகின்றனர். இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்துவேன் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .