2025 ஜூன் 21, சனிக்கிழமை

தேர்தல், இராணுவத்தின் செயற்பாடல்ல: கீர்த்தி

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தேர்தல் இராணுவத்தின் செயற்பாடு அல்ல.வேட்பாளர்கள் சட்டம், விதிமுறைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டுமென நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னக்கோன் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ். லவ்சி விருந்தினர் விடுதியில் இன்று மாலை; நடைபெற்ற  பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் இராணுவத்தின் பிரசன்னம் தொடர்பாக 5 கட்சி தலைவர்களுடனும் சந்திப்பு இடம்பெற்றது.

இராணுவத்தினரின் செயற்பாடுகளில் வேட்பாளர்கள் கலந்து கொள்ளாது இருப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்குதவற்கான தீர்மானங்கள் அதன்போது எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தேர்தல் தொடர்பான விடயங்களில் சட்டம் சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். பொலிஸ் திணைக்களம் சமநிலையில் செயற்பட்டு, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறினார்.

அதேவேளை, அச்சுறுத்தல் விடுக்கப்படும் வேட்பாளர்கள், பொலிஸ்மா அதிபரின் ஊடாக அல்லது தேர்தல் திணைக்களத்தின் ஊடாக பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக் கொள்ள முடியுமென்றும், அத்துடன், எந்த வித அச்சுறுத்தல்களும் இல்லாத வேட்பாளர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வேண்டுமென பொலிஸாரிடம் கேட்டால் அவர்களுக்கான பாதுகாப்பு வழங்குவதில் பிரச்சினை இருக்கின்றது என்றுமு; அவர் சுட்டிக் காட்டினார்.

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல்களில்  மூன்று மாகாணங்களிலும் 251 தேர்தல் வன்முறைகள் இதுரை பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதில்  மத்திய மாகாணத்தில் 120 வன்முறைகளும், வடமத்திய மாகாணத்தில் 88 வன்முறைகளும், வடமாகாணத்தில் 43 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் உள்ள மன்னார்,கிளிநொச்சி,வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஐந்துக்கு குறைவான முறைப்பாடுகளும் யாழ் மாவட்டத்தில் மட்டும் 23 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .