2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழ். சிவில் அமைப்புகளுடன் கபே அமைப்பு சந்திப்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா,எஸ்.சொரூபன்


சிவில் சமூக அமைப்புக்களின் மன்றங்களைக் கட்டியெழுப்பும் கலந்துரையாடல் யாழில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

யாழ். ஞானம்ஸ் விருந்தினர் விடுதியில் ஆரம்பமான இந்தக் கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஆர்வமுள்ள குழுக்களுமாக (ளுவயமந ர்ழடனநசள) பல பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (ஊயஅpயபைn கழச குசநந யனெ குயசை நுடநஉவழைளெ) ஏற்பாடு செய்திருந்த சிவில் நிறுவனங்களின் மன்றம் ஒன்றைக் கட்டி எழுப்பும் (டுநவ ருள டீரடைன ய ஊiஎடை ளுழஉநைவல குழசரஅ) இந்த கலந்துரையாடலில் 'கபே' அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன், இணைப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் ஆகியோர் பங்கேற்றனர்.

சமகால சூழலில் சிவில் சமூக அமைப்புக்களைப் பலப்படுத்தி,  அனைத்து சிவில் சமூக அமைப்புக்களின் மன்றம் ஒன்றைக் கட்டி எழுப்புதலின் முக்கியத்துவம் மற்றும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் இடம்பெறுவதற்கு சிவில் சமூக அமைப்புக்களின் பங்களிப்புப் பற்றியும் இக்கலந்துரையாடலில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .