2025 ஜூன் 21, சனிக்கிழமை

சமுர்த்தி சம்பந்தமான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 01 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

சமுர்த்தி சம்பந்தமாக பொதுமக்களுக்கிடையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் நகர் மேற்கு சமுர்த்தி வங்கிக் கட்டிடத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

யாழ். மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் எஸ்.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், மகா சங்கங்களின் முகாமையாளர்கள் கலந்து கொண்டார்கள். மேலும், வளவாளர்களாக தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த 20 அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.

தென்னிலங்கை அலுவலர்களுடன் யாழ். மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி வங்கி அலுவலர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து எதிர்வரும் 20ஆம் திகதிவரை வீடு வீடாகச் சென்று  சமுர்த்தி  பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சமுர்த்தி முகாமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .