2025 ஜூன் 21, சனிக்கிழமை

மயிலிட்டியிலுள்ள ஆலயங்களில் வழிபாடு மேற்கொள்ள ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ். உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட மயிலிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 6ஆம் திகதி அந்தப் பகுதி மக்களை அங்கு அழைத்துச் செல்லவுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கு, மயிலிட்டிப் பகுதி மக்கள், அந்தப் பகுதி ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு அனுமதி பெற்றுத் தருமாறு தன்னிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 6ஆம் திகதி மயிலிட்டியில் அமைந்துள்ள ஆலயங்களில் அந்தப் பகுதி மக்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான  ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

தனது தலைமையிலேயே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளதாகவும்  மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் எதிர்வரும் 6ஆம் திகதி அங்கு செல்வதற்கான ஆயத்தங்களைச் மேற்கொள்ளுமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • KB Monday, 02 September 2013 12:42 PM

    அன்று 200 பேரென்று சொல்லி 20 பேருக்கு அனுமதி பெற்றீர்கள். 6ம் திகதி எத்தனை பேரை ஏமாற்றப்போகிறீர்கள்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .