2025 ஜூன் 21, சனிக்கிழமை

காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த குடும்பஸ்தர் ஒருவர், யாழ்ப்பாணம், கோண்டாவில் மேற்கு பகுதியில் உள்ள தோட்ட வெளியிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

உயர் பாதுகாப்பு வலயமான தையிட்டியில் இருந்து இடம்பெயர்ந்து கோண்டாவில் நவரத்தினராசா வீதியில் குடியிருந்த ஒரு பிள்ளையின் தந்தையான கணபதிப்பிள்ளை சீனிவாசகம் (வயது 50) என்பவரே இவ்வாறு சடலாமாக மீட்க்கப்பட்டவராவார்.

சடலம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸார், மரண விசாரணைகளை அடுத்து சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .