2025 ஜூன் 21, சனிக்கிழமை

கோண்டாவில் விபத்தில் இளைஞன் பலி; பிரதேசத்தில் பதற்றம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


கோண்டாவில், பலாலி வீதி கிழக்கு சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தென்னிலங்கையிலிருந்து சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்ற  பஸ்வண்டியொன்றே பஸ்க்கு முன்பாக சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கோண்டாவில் கிழக்கு காளிகோவிலடியைசேர்ந்த 24 வயதான ரவிகுமார் பிரட்மன் என்ற இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து பஸ்ஸின் சாரதி தப்பியோடிவிட்டதாகவும் அந்த பஸ்ஸை சுற்றி பிரதேசவாசிகள் குழுமியிருந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளமையினால் அங்கு பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .