2025 ஜூன் 21, சனிக்கிழமை

உழவு இயந்திர விபத்தில் இருவர் படுகாயம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 02 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

உழவு இயந்திர விபத்தில் படுகாயமடைந்த இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் பகுதியிலேயே இந்த விபத்து இன்று திங்கட்கிழமை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உழவு இயந்திரத்தை செலுத்தியவரின் கவலையீனத்;தால் இந்த விபத்து இடம்பெற்றதாகவும்; இதில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரும் பாதசாரி ஒருவருமே படுகாயமடைந்துள்ளனர்.

அத்துடன் அவ்விடத்திலிருந்த ஈ.பி.டி.பி.அலுவலகத்தின் மதிலுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டவரின் கை எலும்பு உடைந்துள்ளதுடன் தலையிலும் பாரிய காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .