2025 ஜூன் 21, சனிக்கிழமை

மாணவி காணாமல் போன விவகாரம்; இருவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 02 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரட்ணராசா

மல்லாகம் கோட்டைக்காட்டுப் பகுதியில் உள்ள 16 வயது மாணவி காணாமல் போன சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோருக்கும் மற்றுமொரு குடும்பத்தினருக்கும்  இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது அவ்விருவரையும் இரண்டு வார காலத்திற்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றத்தினால் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்விரு குடும்பத்தினருக்கும் இடையே நேற்று முன்தினம்  மாலையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .