2025 ஜூன் 21, சனிக்கிழமை

தூக்குக் காவடி எடுத்தவர் வைத்தியசாலையில்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 04 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

கோவிலுக்கு நேர்த்தி வைத்து தூக்குக் காவடி எடுத்த இளைஞர் மயக்கமுற்ற நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பன்னாலை பிள்ளையார் ஆலயத்திற்க்கு நேர்த்திக் கடனுக்காக தூக்குக் காவடி எடுத்துச் சென்ற சண்டுகலிங்கம் கோகுலன் வயது 26 என்பவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூக்குக் காவடியுடன் ஆலயத்திற்கு சென்றதன் பின்னர்  காவடியிலிருந்து இறக்கப்பட்டதன் பின்னரே மயக்கமுற்று வீழ்ந்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவர் எழும்பாத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தொவித்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .