2025 ஜூன் 21, சனிக்கிழமை

லலித், குகன் வழக்கு நவம்பருக்கு ஒத்திவைப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 05 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கடத்தப்பட்டு காணமல் போனதாக கூறப்படும் லலித், குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணைகளை நவம்பர் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் க.சிவகுமாரே மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது கொழும்பிலுள்ள இலத்திரனியல் ஊடமொன்றின் பிரதிநிதியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

லலித் மற்றும் குகன் காணாமல் போனதாக கூறப்படும் செய்தி மற்றும் அதற்கு பதிலளித்தவர்களின் செய்தி அறிக்கைகளை அரச சட்டத்தரணிகளிடம் கையளிக்குமாறும் உத்தரவிட்ட நீதவான் வழக்கையும் ஒத்திவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

லலித், குகன் இருவரும் உயிரோடு இருப்பதாக கெஹெலிய கூறினார்: நீதிமன்றில் உதுல் சாட்சி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .