2025 ஜூன் 21, சனிக்கிழமை

முன்னாள் போராளிகளின் வீடுகள் மீளக்கையளிப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 05 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யுத்தம் நடைபெற்ற காலத்திற்கு முன்னர் திருமணமான போராளிகளுக்கென விடுதலைப்புலிகள் அமைப்பினால் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டம்  மீளவும் முன்னாள் போராளிகளின் குடும்பங்களிற்கு பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பினால் விசுவமடு, சுண்டிக்குளம் பகுதியில் இருந்த அரச காணியில்  வீட்டுத்திட்டம் ஒன்று அமைக்கப்பட்டு திருமணமான போராளிகள் வசிப்பதற்கு  வீடுகள் வழக்கப்பட்டன.

யுத்தம் நிறைவுபெற்ற பின்னர் இந்த வீடுகளை கண்டாவளைப் பிரதேச செயலகம்  தமது ஆளுகைக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. தற்போது இந்த வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்த முன்னாள் போராளுக்கு மீளவும் இந்த வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் 26 வீடுகள் விடுதலைப்புலிகள் அமைப்பினால் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது மீள்குடியேறியுள்ள முன்னாள் போராளிகள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் மீளவும் அங்கு வசிப்பதற்கு அந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னர் வீடுகள் வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் பல கிளிநொச்சி மாவட்டத்திற்கு வெளியில் வசித்து வருபவர்கள் ஒரு குறிப்பிட்ட சில குடும்பங்கள் மட்டுமே இங்கு வந்து குடியேறியுள்ளதாகவும் அவ்வாறு மீள்குடியேறியுள்ள முன்னாள் போராகளிற்கு தேவையாக அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  கண்டாவளைப் பிரதேச செயலர் முகுந்தன் தெரிவித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .