2025 ஜூன் 21, சனிக்கிழமை

கூட்டமைப்பின் வெற்றிக்கே ஆதரவு: மனோ

Kogilavani   / 2013 செப்டெம்பர் 05 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


'முள்ளிவாய்கால் யுத்தத்திற்குப் பின்னர் எம்மால் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் எமது அரசியல் பலத்தையும் நாங்கள் இழப்பதற்கு தயாராக இல்லை. எனவே எங்கள் அரசியல் பலத்தை நிரூபிப்பதற்காக நடைபெறவுள் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு ஆதரவு வழங்கவுள்ளோம்' என ஜனநாயக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

யாழ்.கிறீன்கிராஸ் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

'நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக சர்வதேச ரீதியில் பார்க்கப்படுகின்றது. இந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றி பெறுவதன் மூலம் வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும். எமக்கு உரிமை கிடைக்கும் போது அதற்கான வழிமுறைகளை முன்னெடுக்கமுடியும்
இந்த நாடு கொடிய ஆட்சியிக் கீழ் கட்டுண்டுள்ளது.

இந்த ஆட்சிக்கு முடிவுகட்டி நல்ல பாடம் புகட்டவேண்டும் என்றால் இந்த தேர்தலில் நாங்கள் வெற்றிபெறவேண்டிய தேவை இருக்கின்றது.

குறுகிய காலத்தில் வரவிருக்கும் இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெறும் தானே என்ற சிந்தனையைக் கடந்து அன்றைய தினம் இதனை ஒரு கடமையாக ஏற்று எங்கள் வாக்குரிமையைச் சிதைக்காமல் அனைவரும் வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்யவேண்டும்' என்று ஜனநாயக மக்கள் முன்னணி கேட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .