2025 ஜூன் 21, சனிக்கிழமை

விவசாயப் பயிற்சி நெறிக்கான நேர்முகப் பரீட்சை

Kogilavani   / 2013 செப்டெம்பர் 06 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியினால் மருதனார் மடத்தில் நடத்தப்படும் நான்கு மாத விவசாயப் பயிற்சிநெறிக்கான நேர்முகப்பரிட்சை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

இலவசமாக நடத்தப்படும் இப்பயிற்சி நெறியில் ஆண், பெண் இருபாலரும் இணைந்துகொள்ளவுள்ளனர்.

பயிற்சி நெறியில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் க.பொ.த சாதாரணத்தில் விஞ்ஞானம் அல்லது விவசாய விஞ்ஞானத்தில் சித்தி அடைந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகப்பரீட்சையில் கலந்துகொள்ள விரும்புவர்கள் கிராம அலுவலர் உட்பட மற்றும் இருவரின் நற்சான்றிதழ்கள், பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், கல்வித்தகமைச் சான்றிதழ்களுடன் நேர்முகப் பரீட்சைக்கு எதிர்வரும் திங்கட்;கிழமை காலை கிராம சமூகமளிக்கும்படி கோரப்பட்டுள்ளனர்.     

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .