2025 ஜூன் 21, சனிக்கிழமை

உடுத்துறை மகா வித்தியாலயத்தின் கட்டிடம் திறப்பு

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்
 
சுவிஸ் நிறுவனத்தினால் மீள்புனரமைப்புச் செய்யப்பட்ட உடுத்துறை மகா வித்தியாலய கட்டிடம் கடந்த வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
 
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள உடுத்துறை மகா வித்தியாலயத்தில் பழைய கட்டிடம், சுவிஸ் அபிவிருத்தி நிறுவனத்தினால் 26.9 மில்லியன் ரூபாய் செலவில் மீள்புனரமைப்புச் செய்யப்பட்டது.
 
இக்கட்டிடத்தினை சுவிஸ் அபிவிருத்தி நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கேட் மீயர், வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் ஆகியோர் திறந்து வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .