2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 09 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மானிப்பாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் காயமடைந்துள்ளார்.

சங்கானை, நித்தியாகமம் பகுதியைச் சேர்ந்த கே.குணதீபன் (வயது 34) என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் வேலை செய்து விட்டு, குறித்த குடும்பஸ்தரும் அவரது நண்பர்கள் இருவரும்  வீதியால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தபோது, முகத்தை கறுப்புத் துணியால் கட்டியிருந்த 3  இனந்தெரியாத நபர்கள் குறித்த குடும்பஸ்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பதஸ்ரின் மனைவி தெரிவித்தார்.

இதன்போது குறித்த குடும்பஸ்தருடன்  கூடச் சென்ற இருவரும் தப்பியோடியுள்ளனர்.

வாள்வெட்டுக்கு இலக்கான குறித்த குடும்பஸ்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .