2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வாகனத்தில் ஆயுதம் இருப்பதாக பொலிஸ் சோதனையிட்டது: வேட்பாளர்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 18 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

எனது வாகனத்தில் ஆயுதம் இருப்பதாக கூறி இளவாளை பொலிஸார் வாகனத்தை சோதனையிட்டனர் என்று ஜக்கிய தேசிய கட்சியின் வடமாகாண சபை வேட்பாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் தெரிவித்தார்.

குறித்த வேட்பாளர் இளவாளை பகுதியில் அவரது ஆதரவாளர்களுடன்  இன்று 1.00 மணியளவில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், இளவாளை சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய பொலிஸார் வாகனத்தினை வீதியில் இடைநிறுத்தி வாகனத்திற்குள் ஆயுதம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதென கூறி பாசோதனை மேற்கொண்டுள்ளனர்.

சோதனையின் போது எனது வாகனத்திலிருந்து சந்தேகத்திற்கிடமான எவ்விதமான பொருட்களோ, ஆயுதங்களோ மீட்கப்படவில்லை. அதன் பின்னர் பொலிஸார் தன்னிடம் மன்னிப்பு கேட்டுசென்றதாகவும் அந்த வேட்பாளர் கூறினார்.

தேர்தல் விதிமுறைகளுக்கு அமைவாக தாங்கள் பிரச்சார நடவடிக்கையினை மேற்கொண்டு வரும் வேளையில், அச்சுறுத்துவதற்காகவும், பிரசார நடவடிக்கையில் பின்னடைவினை ஏற்படுத்துவதற்காகவும் இவ்வாறான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர்  குற்றஞ்சாட்டியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக இளவாளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,  வாகனத்தில் 30 போத்தல் மதுபானம் இருந்து தகவல் கிடைத்ததையடுத்தே வாகனத்தை சோதனைக்கு உட்படுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

=

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .