2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பானம் அருந்திய குழந்தை வைத்தியசாலையில்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

 குளிர்பானத்தை அருந்தியதாக கூறப்படும் குழந்தையொன்று தொண்டை வீங்கிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கட்டுவன் வீதி மல்லாகத்தினைச் சேர்ந்த ரஜித் கபின்ஜா என்ற ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் 18 திகதி சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அருந்திய நிலையில் வைக்கப்பட்டிருந்த பானத்தில் எறும்புகள்  வீழ்ந்து கிடப்பதை அறியாத மேற்படி குழந்தை அதனை  அருந்தியுள்ளது.

பின்னர் வழமைக்கு மாறாக குழந்தையின் தொண்டையில் வீக்கம் ஏற்பட பெற்றோர் குழந்தையை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலதிக சிகிச்சைக்காக குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

குழந்தையின் நிலை தேரி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .