2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

அனுமதி புதுப்பிக்காத குடிநீர் போத்தல்கள் அழிப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


யாழ்.கொடிகாமம் பகுதியில் சுகாதார திணைக்களத்தின் அனுமதி புதுப்பிக்காத குடிநீர் போத்தல்கள் புதன்கிழமை (23) சுகாதார பரிசோதகர்களினால் அழிக்கப்பட்டன.

உணவு சுகாதார வாரத்தை முன்னிட்டு கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி சுகாதார பரிசோதகர்களினால் உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குடிநீர் நிறுவனம் ஒன்றின் தண்ணீர்ப் போத்தல்கள் கொடிகாமம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் விநியோகிக்கப்பட்டுகொண்டிருக்கும் போது சுகாதாரப் பரிசோதகர்கள் அதனைப் பரிசோதித்தனர்.

பரிசோதனையின்போது, அந்த குடிநீர் நிறுவனத்தின் அனுமதியானது புதுப்பிக்கப்பட்டு இருக்காததினால், கைப்பற்றப்பட்ட 19 லீட்டர் கொள்ளளவு கொண்ட 63 குடிநீர் போத்தல்களும் நிலத்தில் ஊற்றி உடனடியாக அழிக்கப்பட்டன.

குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் 3 வருடங்களுக்கு ஒருமுறை சுகாதார திணைக்களத்தில் தங்கள் அனுமதிகளைப் புதுபிக்கவேண்டும் என்பதுடன் கண்டுபிடிக்கப்பட்ட நிறுவனத்தின் அனுமதி 2006 ஆம் ஆண்டுடன் முடிவுற்று இருந்ததாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .