2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வகுப்பறையில் வெள்ளம் புகுந்தததால் மாணவர்கள் சிரமம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


பருத்தித்துறை வட இந்து ஆரம்ப பாடசாலையில் வெள்ளம் புகுந்துள்ளதால் பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழைக்காரணமாக  வெள்ளநீர் வடிந்தோடாத நிலையில்  பாடசாலைகளின் வகுப்பறைகளில் தேங்கியுள்ளது.

வீதி அபிவிருத்தி நடவடிக்கையின்போது வடிகால் அமைப்பு சீரான முறையில் அமைக்கப்படாமையால் வெள்ளநீர் இவ்வாறு பாடசாலை வகுப்பறைகளுக்குள் புகுந்துள்ளதாக பாடசாலை சமூகத்தினர் தெரிவித்தனர்..

நேற்று (23) காலை குறித்த பாடசாலைக்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் வெள்ளநீர் புகுந்து பாதிக்கப்பட்ட வகுப்பறைகளைப் பார்வையிட்டதுடன், பாடசாலை நிர்வாகத்;தினரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தொடர்ந்து நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் வகுப்பறையில் தேங்கிய வெள்ள நீரை வெளியேற்றுவதற்கும் ஏற்பாடு செய்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .